mardi 24 décembre 2013

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும். இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :

1 பிரபவ**********1987 - 1988 2 விபவ***********1988 - 1989 3 சுக்ல************1989 - 1990 4 பிரமோதூத******1990 - 1991 5 பிரசோற்பத்தி****1991 - 1992 6 ஆங்கீரச*********1992 - 1993 7 ஸ்ரீமுக***********1993 - 1994 8 பவ*************1994 - 1995 9 யுவ ************1995 - 1996 10 தாது************1996 - 1997 11 ஈஸ்வர*********1997 - 1998 12 வெகுதானிய****1998 - 1999 13 பிரமாதி********1999 - 2000 14 விக்கிரம*******2000 - 2001 15 விஷு*********2001 - 2002 16 சித்திரபானு****2002 - 2003 17 சுபானு********2003 - 2004 18 தாரண*********2004 - 2005 19 பார்த்திப*******2005 - 2006 20 விய**********2006 - 2007 21 சர்வசித்து*****2007 - 2008 22 சர்வதாரி ******2008 - 2009 23 விரோதி*******2009 - 2010 24 விக்ருதி*******2010 - 2011 25 கர************2011 - 2012 26 நந்தன********2012 - 2013 27 விஜய********2013 - 2014 28 ஜய**********2014 - 2015 29 மன்மத*******2015 - 2016 30 துன்முகி******2016 - 2017 31 ஹேவிளம்பி***2017 - 2018 32 விளம்பி*******2018 - 2019 33 விகாரி********2019 - 2020 34 சார்வரி*******2020 - 2021 35 பிலவ********2021 - 2022 36 சுபகிருது******2022 - 2023 37 சோபகிருது*****2023 - 2024 38 குரோதி********2024 - 2025 39 விசுவாசுவ*****2025 - 2026 40 பரபாவ********2026 - 2027 41 பிலவங்க******2027 - 2028 42 கீலக*********2028 - 2029 43 சௌமிய *****2029 - 2030 44 சாதாரண******2030 - 2031 45 விரோதகிருது**2031 - 2032 46 பரிதாபி*******2032 - 2033 47 பிரமாதீச******2033 - 2034 48 ஆனந்த******2034 - 2035 49 ராட்சச******2035 - 2036 50 நள*********2036 - 2037 51 பிங்கள******2037 - 2038 52 காளயுக்தி****2038 - 2039 53 சித்தார்த்தி****2039 - 2040 54 ரௌத்திரி****2040 - 2041 55 துன்மதி******2041 - 2042 56 துந்துபி*****2042 - 2043 57 ருத்ரோத்காரி**2043 - 2044 58 ரக்தாட்சி *****2044 - 2045 59 குரோதன******2045 - 2046 60 அட்சய******2046 - 2047

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :

1 பிரபவ**********1987 - 1988 2 விபவ***********1988 - 1989 3 சுக்ல************1989 - 1990 4 பிரமோதூத******1990 - 1991 5 பிரசோற்பத்தி****1991 - 1992 6 ஆங்கீரச*********1992 - 1993 7 ஸ்ரீமுக***********1993 - 1994 8 பவ*************1994 - 1995 9 யுவ ************1995 - 1996 10 தாது************1996 - 1997 11 ஈஸ்வர*********1997 - 1998 12 வெகுதானிய****1998 - 1999 13 பிரமாதி********1999 - 2000 14 விக்கிரம*******2000 - 2001 15 விஷு*********2001 - 2002 16 சித்திரபானு****2002 - 2003 17 சுபானு********2003 - 2004 18 தாரண*********2004 - 2005 19 பார்த்திப*******2005 - 2006 20 விய**********2006 - 2007 21 சர்வசித்து*****2007 - 2008 22 சர்வதாரி ******2008 - 2009 23 விரோதி*******2009 - 2010 24 விக்ருதி*******2010 - 2011 25 கர************2011 - 2012 26 நந்தன********2012 - 2013 27 விஜய********2013 - 2014 28 ஜய**********2014 - 2015 29 மன்மத*******2015 - 2016 30 துன்முகி******2016 - 2017 31 ஹேவிளம்பி***2017 - 2018 32 விளம்பி*******2018 - 2019 33 விகாரி********2019 - 2020 34 சார்வரி*******2020 - 2021 35 பிலவ********2021 - 2022 36 சுபகிருது******2022 - 2023 37 சோபகிருது*****2023 - 2024 38 குரோதி********2024 - 2025 39 விசுவாசுவ*****2025 - 2026 40 பரபாவ********2026 - 2027 41 பிலவங்க******2027 - 2028 42 கீலக*********2028 - 2029 43 சௌமிய *****2029 - 2030 44 சாதாரண******2030 - 2031 45 விரோதகிருது**2031 - 2032 46 பரிதாபி*******2032 - 2033 47 பிரமாதீச******2033 - 2034 48 ஆனந்த******2034 - 2035 49 ராட்சச******2035 - 2036 50 நள*********2036 - 2037 51 பிங்கள******2037 - 2038 52 காளயுக்தி****2038 - 2039 53 சித்தார்த்தி****2039 - 2040 54 ரௌத்திரி****2040 - 2041 55 துன்மதி******2041 - 2042 56 துந்துபி*****2042 - 2043 57 ருத்ரோத்காரி**2043 - 2044 58 ரக்தாட்சி *****2044 - 2045 59 குரோதன******2045 - 2046 60 அட்சய******2046 - 2047

33 thoughts

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம் 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம். 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான் 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும் 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர் 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும் 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது. 3